Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்று தீராத திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்டுகள்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (12:34 IST)
இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. 

 
திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன.
 
ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை வாங்க பெரும் டிமாண்ட் உள்ளது. கடந்த மாதத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியான சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 
 
தினமும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. 
 
இதற்கு முந்தைய மாதங்களில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2, 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிடும். ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments