Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருப்பு!
, சனி, 18 ஜூன் 2022 (12:01 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக விடுமுறை காலம் என்பதால் திருப்பதி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மாதத்தில் அதிகமான பக்தர்கள் வருகையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக மக்கள் காத்திருந்ததாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் வார இறுதி என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை முதல் அதிக அளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து தரிசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 4 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.
 
இதே போல 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி ,ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் தொடங்கிய நிலையில் சில நிமிடங்களுக்குள்ளாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இதனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இலவச தரிசனம் மூலமாகவே தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பில் தளர்வு - புதிய சலுகைகள் அறிவிப்பு