Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை தரிசன டிக்கெட் ஃபுல் புக்: என்ன செய்ய போகிறது திருப்பதி தேவஸ்தனம்?

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (13:48 IST)
திருப்பதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் தேவஸ்தானம் நாளை அவசரக் கூட்டம் நடத்த உள்ளது.  
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் திருப்பதி திறக்கப்பட்டது.  
 
முதல் ஒரு வாரத்திற்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நாளை அவசரக்கூட்டம் நடத்த  உள்ளது. ஜூலை மாதத்திற்கு டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் ரூ.9.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனத்திற்காக மூன்றாயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டது. 
 
எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என தரிசனம் நடைமுறைகள் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி தேவஸ்தான ஊழியர்கள் கலந்து அலோசித்து முடிவெடுக்கவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments