Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை தரிசன டிக்கெட் ஃபுல் புக்: என்ன செய்ய போகிறது திருப்பதி தேவஸ்தனம்?

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (13:48 IST)
திருப்பதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் தேவஸ்தானம் நாளை அவசரக் கூட்டம் நடத்த உள்ளது.  
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் திருப்பதி திறக்கப்பட்டது.  
 
முதல் ஒரு வாரத்திற்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நாளை அவசரக்கூட்டம் நடத்த  உள்ளது. ஜூலை மாதத்திற்கு டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் ரூ.9.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனத்திற்காக மூன்றாயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டது. 
 
எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என தரிசனம் நடைமுறைகள் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி தேவஸ்தான ஊழியர்கள் கலந்து அலோசித்து முடிவெடுக்கவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments