Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (10:27 IST)
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும். 
 
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட 300 ரூபாய் டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
 டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி நாள் வருவதை அடுத்து  டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் சொர்க்கவாசல் திறக்கும் நாட்களில் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட் இன்று முதல் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
ஆன்லைன் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை  https://ttdevasthanams.ap.gov.in என்ற  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments