Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொர்க்கவாசல் செல்ல இலவச டிக்கெட்டுகள்! – திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (15:13 IST)
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்காக சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று நள்ளிரவு 12 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலரும் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர்

அதை தொடர்ந்து பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் நிலையில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்த வண்ணம் உள்ளனர்.

தினசரி இலவச தரிசனம் வழியாக 50 ஆயிரம் பக்தர்களும், 300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2 ஆயிரம் பக்தர்களும் நாள்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இலவச சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் விநியோகிக்கப்படும் நிலையில் அதை பெறுவதற்கு அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments