Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள்! – இன்று ஆன்லைன் விற்பனை!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (09:24 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கான மார்ச் மாத டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு இவ்வளவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதித்து அதற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது.

கடந்த மாதம் வரை ரூ.300 தரிசன டிக்கெட்டில் தரிசிக்க ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த மாதம் முதலாக மேலும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதுபோல இலவச தரிசனத்திற்கு 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments