Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் இலவச தரிசன கவுண்ட்டர் குறைப்பு! எங்கெங்கு டோக்கன் கிடைக்கும்?

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (09:07 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக பக்தர்கள் வரும் நிலையில் இலவச தரிசன கவுண்ட்டர்கள் குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் திருப்பதியில் 9 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

தற்போது வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து பரமபத வாசல் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் இலவச டோக்கன் கவுண்டர்களும் குறைக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தான அறிவிப்பின்படி, அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments