Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: தேவஸ்தானம் அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (12:00 IST)
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல்  நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும். ஒன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவ விழா.

ஏற்கனவே செப்டம்பர் மாத புரட்டாசி பிரமோற்சவ விழா முடிவடைந்த நிலையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

ஆகம விதிகளின்படி பிரம்மோற்சவ விழா நடைபெறும் என்றும் ஏழுமலையானின் சேனாதிபதி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்படுவார் என்றும்  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் 22ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை  மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை வாகன சேவையில் நடைபெற உள்ளதாகவும் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு சங்கரா ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments