Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மணி நேரம் திருப்பதி மூடல்… அன்னதானமும் ரத்து!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:47 IST)
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது என அறிவிப்பு.


நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி நேர்க்கோட்டில் பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சமய நம்பிக்கையில் இது நிலவை பாம்பு விழுங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் (ஐப்பசி 22) தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 6.20 மணிக்கு முடிவடையும். இந்த சமயத்தில் இரவு நேரமாக உள்ள மற்ற நாடுகளில் கிரகணத்தை முழுமையாக காண முடியும்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். அதாவது 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது. இதனால் அன்று முழுவதும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள் என்பதால் அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளியின் போது சூரிய கிரகணம் ஏற்பட்டதால் அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் 8:11 முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By: Sugapriya Prakash 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments