Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்து வாக்குல ரெண்டு கல்யாணம்..! டிக்டாக் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (12:50 IST)
டிக்டாக் வீடியோ செய்யும் நபர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் காதல் கொண்ட நிலையில் இருவரையுமே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த 25 வயது வாலிபர் டிக்டாக் வீடியோக்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவரது டிக்டாக் வீடியோக்களை கண்டு விசாகப்பட்டிணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடன் செல்போன் மூலமாக பழகியுள்ளார். பின்னர் இது காதலாக மலர்ந்துள்ளது.

அதேபோல கடப்பாவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணும் இளைஞர் மேல் காதல் கொள்ள மற்றொரு பெண்ணுக்கு தெரியாமல் இந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார் அந்த இளைஞர். இந்நிலையில் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் சமீபத்தில் அந்த இளைஞருக்கு திருமணம் நடந்துள்ளது.

ALSO READ: போலி போலீஸை பிடிக்க காதலர்களான காவலர்கள்! – திரைப்படத்தை மிஞ்சும் சம்பவம்!

அதற்கு பின்னர் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த இளம்பெண், அந்த இளைஞர் சில நாட்களாக பேசாததால் அவரை தேடி அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு அவருக்கு திருமணமாகியிருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆனால் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதால் இனி திரும்பி செல்ல முடியாது எனவும், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறும் அந்த பெண் கேட்டுள்ளார். இதற்கு இளைஞரின் முதல் மனைவியும் சம்மதிக்கவே அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். டிக்டாக் மூலமாக இளைஞர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments