Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'டிக் டாக் 'வீடியோவால் 3 பேர் உயிரிழப்பு : பதறவைக்கும் சம்பவம்

Webdunia
புதன், 1 மே 2019 (16:47 IST)
இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விபரீத ஆசைகளும் மனிதனுக்குக் கொடிகட்டிப் பறக்கிறது. அதற்கேற்ப செல்பொன்களும் சந்தையில் புதுவிதவிதமான வசதிகளுடன் கிடைக்கிறது. அதனால்  பரவிவரும் செல்ஃபி மோகம் யாரைத்தான் விட்டுவைத்தது.
செல்ஃபியால் பல விபரீதங்கள் ஏற்படுவதை நாள்தோறும் தொலைக்காட்சி, டிவிக்களில் பார்க்கிறோம். அதேபோல் ஒரு அசம்பாவிதம் ஹரியானாவில் நடந்துள்ளது.
 
கடந்த திங்கள் கிழமை அன்று அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 4 பேர் டிக்டாக் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இது சரியாக அரைமணி நேரத்துக்கு மேல் நடந்ததாகத் தெரிகிறது.
 
அப்போது துரதிஷ்டவசமாக ரயில் வேகத்துடன் வந்துள்ளது. இதைப் பார்த்த தினேஷ் என்பவர் சுதாரித்துக்கொண்டு கீழே குதித்துவிட்டார். அனால் மற்ற மூவர் மீது ரயில் மின்னல் வேகத்தில் மோதியது.
 
சுமார் 30 அடிதூரத்துக்கு அம்மூவரின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் மூவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்ய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments