Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (17:39 IST)
திகார் சிறைச்சாலை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக புறநகர் பகுதிக்கு மாற்ற இருப்பதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.
 
திகார் சிறைச்சாலை 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக இருந்து, 400 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகளை உள்ளடக்கியது.
 
இந்நிலையில், முதல் மந்திரி ரேகா குப்தா இன்று டெல்லி சட்டசபையில் பட்ஜெட்டை வெளியிட்டார். அப்போது அவர், "திகார் சிறைச்சாலை நகரின் எல்லைக்கு வெளியே மாற்றப்படும்" என அறிவித்தார். 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனை பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
திகார் சிறைச்சாலை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு ரீதியாக மாற்றம் தேவையானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments