டெல்லி உயிரியல் பூங்கா மர்மமான முறையில் உயிரிழந்த புலி: கொரோனா காரணமா?

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:32 IST)
டெல்லி உயிரியல் பூங்கா மர்மமான முறையில் உயிரிழந்த புலி
கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக விலங்குகளுக்கும் பரவி வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 14 வயது புலி ஒன்று மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது.
 
ஏற்கனவே இந்த புலிக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளது என உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புலிக்கு கொரோனா வரைஸ் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த புலியின் இரத்த மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து உயிரியல் பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘14 வயது கல்பனா என்ற இந்த புலி கடந்த புதன் மாலை 6.30 மணிக்கு உயிரிழந்ததாகவும், மறுநாள் மிகச்சில ஊழியர்களுடன் இந்த புலி புதைக்கப்பட்டதாகவும் கூறினார். 
 
ஏற்கனவே அமெரிக்காவில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் புலி ஒன்று மர்மமான முறையில் பலியாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments