Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு வந்த 3 பேருக்கு கொரோனா: வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் நிறுத்தப்படுமா?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (11:39 IST)
வெளிநாடுகளிலிருந்து இன்று பெங்களூரு திரும்பிய 3 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு கொரோனா அலைகள் ஏற்பட்டதற்கு ஒரே காரணம் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளால் தான் என்றும் அதனால்தான் இரண்டு வருடங்கள் லாக்டோன் போன்ற அவஸ்தையை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அனுபவித்தனர் என்றும் கூறப்படுகிறது.
 
எனவே மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படுவதை தடுப்பதற்கு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்றும் அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களை காப்பாற்ற முடியும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பெங்களூரு இளம்பெண் புகார்..!

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு: உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை..!

என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்!

3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து - பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments