Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் போலவே பிரச்சனையை சந்திக்கும் பவன் கல்யாண்.. ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்..!

Mahendran
சனி, 27 ஏப்ரல் 2024 (12:38 IST)
தமிழகத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பெயரிலேயே 5 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பிட்டாபுரம் என்ற சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரது பெயரில் இருவர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் சில பவன் கல்யாண் பெயரில் உள்ளவர்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வாக்காளர்களை குழப்புவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்றும் குற்றம் காட்டப்பட்டுள்ளது

அதுபோல ஜன சேனா கட்சி வேட்பாளர் பாலிஷெட்டி ஸ்ரீநிவாஸ் என்பவர் தாடேபல்லி என்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதே தொகுதியில் அதே பெயரில் மற்றொருவர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாகவும் இது போல் இன்னும் சில தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளரின் பெயரிலேயே வேட்பாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு போட்டியாக வாக்காளர்களை குழப்பும் வகையில் வேண்டும் என்றே தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments