Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:52 IST)
சனி ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள் பக்ரீத் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதை அடுத்து திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் கூடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

திருப்பதியில் சாதாரணமாக அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற நிலையில் தற்போது மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் அதிகமாக கூட்டம் இருப்பதாகவும் அதனை அடுத்து பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் கடந்த 14ஆம் தேதி மட்டும் 36,000 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் மேலும் முடி காணிக்கை செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் அலைமோதும் கூட்டம் காரணமாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments