Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்போனில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் கைது!

செல்போனில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் கைது!

செல்போனில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் கைது!
, செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (13:39 IST)
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நூதன முறையில் செல்போனில் மறைத்து வைத்து கஞ்சா கடத்திய மூன்று சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை நடைபெற்று வருவதால் போதை பொருட்கள் கடத்தல் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதை தடுக்கு நேற்று முன்தினம் இரவு குமுளியில் கலால் இன்ஸ்பெக்டர் சுனில்ராஜ் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 
இந்த ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் நடமாடிய மூன்று சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சிறுவர்கள் தங்களது செல்ஃபோனில் பேட்ரி போடும் பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
 
சுமார் 30 கிராம் கஞ்சா மறைத்து வைத்து கடத்த முயன்ற அவர்களை போலிசார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மூன்று சிறுவர்களும் பல மாதங்களாக காலணி மற்றும் உணவு பாத்திரம் போன்ற பொருட்கள் மூலம் நூதன முறையில் கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடீஸ்வரரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!