Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோவிலுக்கு வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவிலுக்கு வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு
, ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:04 IST)
திருப்பதி கோவிலுக்கு சித்தூர் மாவட்ட பக்தர்களை தவிர வேறு மாவட்ட பக்தர்கள் அல்லது வேறு மாநில பக்தர்கள் வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திருப்பதி கோவில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதிக்கப் பட்டது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் நாளொன்றுக்கு தினமும் 2,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தை தவிர வேறு சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!