Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி தாவிய கவுன்சிலர்கள் – கடுப்பில் மம்தா பானர்ஜி

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (18:33 IST)
மக்களவை தேர்தல் முடிந்தாலும் முடிந்தது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கு அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட வங்க தேசத்தை தனது அரசியல் திறமையால் திரிணாமூல் காங்கிரஸின் கோட்டையாக மாற்றினார் மம்தா. ஆனால் அந்த கோட்டைக்குள் பாஜக புகுந்துவிட்டதை அவர் கவனிக்க தவறிவிட்டார். போன சட்டசபை தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே வெற்றிபெறும் அளவில் இருந்த பாஜக இந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களை பிடித்திருப்பதே மம்தாவுக்கு பெரிய அடி.

இந்நிலையில் தற்போது திரிணாமூல் காங்கிரஸிலிருந்து 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களான 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இதோடு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் அடக்கம். ஆக வங்க தேசமும் பாஜகவின் கோட்டையாக மாறி வருகிறதோ என்ற அச்சம் மற்ற திரிணாமூல் காங்கிரஸாரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா “7 கட்டமாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தது போல 7 கட்டமாக அனைத்து கட்சியினரும் பாஜகவோடு வந்து இணைவார்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments