Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த திருடன்

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (17:42 IST)
கேரளா ஆலப்புழா அருகே திருடன், வீட்டில் கொள்ளையடித்த நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கருமாடி என்ற பகுதியைச் சேர்ந்த மதுகுமார் வீட்டின் கதவை மறந்து பூட்டாமல் திருமண நிகழ்ச்சி ஒன்று சென்றுள்ளார்.
 
பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டிலிருந்த நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. உடனே அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  
 
இதையடுத்து காவல்துறையினர் அவர் கொடுத்த புகாரின் அடைப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை அவர் நகை காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு மறுநாளே அவரது வீட்டின் வாசலில் காணாமல் போன மொத்த நகையும் இருந்துள்ளது. 
 
அதில் ஒரு கடிதமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் என்னை மன்னித்துவிடுங்கள், பணத்தேவை இருந்ததால் இப்படி செய்துவிட்டேன். இனி இப்படி திருட மாட்டேன். எனக்கு எதிராக போலீசில் புகார் எதுவும் அளிக்க வேண்டாம். என்று எழுதியுள்ளார். 
 
இதையடுத்து மதுகுமார் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்