Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளவில் ரஷ்யா மீதான கண்ணோட்டத்தை மாற்றிய கால்பந்து போட்டி: பிபா தலைவர்

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (17:28 IST)
ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக பிபா தலைவர் தெரிவித்துள்ளார்.

 
உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷ்யா உள்ளானது.
 
தற்போது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் மாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திவரும் பிபா அமைப்பின் தலைவர் கியானி இன்பான்ட்டினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
அதில் கியானி இன்பான்ட்டினோ, ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments