Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

High Priest

Senthil Velan

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:55 IST)
திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவற்றை கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள் என முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு வேதனை தெரிவித்துள்ளார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் விலங்குகளின் கொழுப்பை கலந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் அதன் புனிதத்தை கெடுத்துவிட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். 
 
இதனை தொடர்ந்து  திருப்பதி லட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.   திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.  இந்த அறிக்கை திருப்பதி பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்த்து மகாபாவம் செய்துவிட்டார்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

 
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டின் தரம் மற்றும் சுவை குறித்து புகார் அளித்தும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ரமண தீட்சிதலு குற்றம் சாட்டி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!