ஒரே ஐடி எண் இருக்கும்.. ஆனா எதுவும் போலி வாக்காளர் அட்டை இல்லை! - தேர்தல் ஆணையம் விளக்கம்!

Prasanth Karthick
திங்கள், 3 மார்ச் 2025 (11:57 IST)

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் போலி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

 

இந்திய குடிமக்களுக்கு வாக்களிக்க உரிமை தரும் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அட்டைகளில் வெவ்வேறு வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் போலி வாக்காளர்களை சேர்த்து பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வெவ்வேறு வாக்காளர்கள் ஒரே வாக்காளர் அடையாள எண்ணை பெற்றிருப்பதால் அதில் ஒன்று போலி என பொருள் அல்ல. வாக்காளர் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்கள் பெயர், பிறந்த தேதி, பேரவைத் தொகுதிகள் உள்ளிட்டவை மாறுபடும். ஒரே தொகுதியில் இருவருக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் இருக்காது என விளக்கம் அளித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments