Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி விளையாட்டின்போது சார்ஜ் தீர்ந்துபோன ஆத்திரத்தில் கத்தியால் குத்திய இளைஞர்!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (12:32 IST)
பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது சார்ஜ் தீர்ந்து போன்ற ஆத்திரத்தில் தன்  சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
இரவு பகலென எல்லா நேரங்களிலும் பப்ஜி விளையாட்டை இணையத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் மனதளவில் அடிமையாக்கி விடுகிறது. 
 
மேலும்  இந்த விளையாட்டின் வீரியத்தால் பல வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
 
அந்தவகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த ரஜினிஷ் ராஜ்பார் என்பவர் பப்ஜி கேம் விளையாடும் போது செல்போனின் சார்ஜ் முற்றிலும் தீர்ந்துள்ளது. பிறகு அவரச அவசரமாக சார்ஜரை தேடியுள்ளார் ரஜினிஷ். ஆனால் அவரது சார்ஜரின் வயர் அறுந்துகிடந்துள்ளதை பார்த்து ஆத்திரமடைந்த ரஜினிஷ்  தனது சகோதரி தான் இந்த வேலையை செய்திருக்கக்கூடும் என சந்தேகம் அடைந்து கத்தியால் ஓமின் வயிற்றில் குத்தியுள்ளார். 
 
கத்திக்குத்தில் காயமடைந்த ஓம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதிய இந்த சம்பவத்தால் ரஜினிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


 
பப்ஜி விளையாட்டின் மீதுள்ள மோகத்தால்  தான் என்ன செய்கிறேன் என்றுகூட தெரியாத அளவுக்கு ஒருவரை மனதளவில் மாற்றிவிடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments