Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் அதிகாரி முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றிய பெண் !

போலீஸ் அதிகாரி முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றிய பெண் !
, புதன், 23 டிசம்பர் 2020 (20:51 IST)
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர் பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற போலீஸ்காரர் முகத்தில் ஒரு பெண் சுடுநீரை ஊற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மநிலத்தில் உள்ள முசாபர்பூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது.

இக்கல்லூரியில் அருகே உள்ள ஈஸ்டர் கேட் மற்றும் அருகிலுள்ள நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது அங்கு ஒரு டீக் கடை மற்றும் சிற்றுண்டிக் கடையையும் அகற்ற வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் டீக்கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்,  விசாரித்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் மீது பாய்லரின் கொதித்துக் கொண்டிருந்த சுடுதண்ணீரைப் ஊற்றினார். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியை பாட்னாவிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்பெண்ணைக் கைது செய்துள்ள போலீஸார் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி, எம்ஜிஆர் படங்களுடன் அழகிரி போஸ்டர்: மதுரையில் பரபரப்பு!