Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமையில் அழைத்த பெண்.. ஆபத்தை உணராமல் அவசரப்பட்ட தொழிலதிபர்! – ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
திங்கள், 12 பிப்ரவரி 2024 (12:12 IST)
ஐதராபாத்தில் நள்ளிரவில் பெண் ஒருவரை சந்திக்க சென்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் பகுதியில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான தொழிலதிபர் ராமு. இவர் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் பாஜக கட்சியிலும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள யூசுப்குடா பகுதிக்கு சென்ற அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் காணப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ALSO READ: நியூஸ் பேப்பரைல் பஜ்ஜி, போண்டா வைத்து விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி

அதில் அவர் கொல்லப்பட்ட அன்று நள்ளிரவில் ஒரு பெண் அவரை போனில் அழைத்து யூசுப்குடாவில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தது தெரிய வந்துள்ளது. செல்போன் எண்ணை கொண்டு போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அந்த பெண்ணும், அவருடன் 8 பேர் கொண்ட கும்பலும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொழிலதிபர் ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமு, மணிகண்டன் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments