Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறையாத செல்பி மோகம்: கடலில் செல்பி எடுக்க முயற்சி செய்த பெண் டாக்டர் பரிதாப சாவு

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (12:03 IST)
கடலில் செல்பி எடுக்க முயற்சி செய்த பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள ஜக்கையா பேட்டையை சேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா. இவர் கோவாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பொழுதுபோக்கிற்காக கோவா கடற்கரைக்கு சென்ற ரம்யா, தனது செல்போனில் கடல் அலையில் நின்றபடி செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராட்சத அலைகள் மோதியதில் நிலைதடுமாறிய ரம்யா தண்ணீரில் விழுந்தார். அவரை அலைகள் இழுத்து செல்வதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவரை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரம்யாவின் உடல் அவரது சொந்த ஊரான ஜக்கையாபேட்டைக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments