Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் சிக்கிச்சை அளிக்க மறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (08:09 IST)
திருமண விழாவின் போது நடந்த சாகச நிகழ்ச்சியில், கழுத்தில் வெட்டுபட்ட மாணவனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், காயமடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐத்ராபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சய நிகழ்ச்சியின் போது சில இளைஞர்கள் கத்தியை சுற்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் சையது ஹமீதுக்கு(16) கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிரிந்தவர்கள் மாணவனை மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

ஆனால், 'சிகிச்சை அளிக்க வசதியில்லை' என இரு மருத்துவமனைகள் திருப்பி அனுப்பின. இதற்கிடையே அதிக ரத்தம் வெளியேறியதில்   சையது ஹமீத் பரிதாபமாக உயிரிழந்தான். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்