Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் உங்கள் மாநிலத்தை கவனியுங்கள்: உபி முதல்வருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (06:40 IST)
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் பெங்களூரில் நடந்த பாஜகவின் யாத்திரை ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், உபி முதல்வருக்கு தனது டுவிட்டரில் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், “சுவர்களின் நிறத்தை மாற்றுவதே வளர்ச்சியா?. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காததால் தக்காளியை உங்கள் வீட்டின் முன் கொட்டுகிறார்கள். அதை முதலில் கவனியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

சமீபத்தில் கர்நாடகத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பிரகாஷ்ராஜ் பிரதமரை நோக்கி எழுப்பிய காரசாரமான கேள்வியால் அவருக்கும், பாஜகவினர்களுக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments