Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

பிரபல செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!
, சனி, 29 ஏப்ரல் 2023 (16:24 IST)
இந்தியாவிலுள்ள மிகப் பிரபலமான செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது டடுவிட்டர் நிறுவனம்.

இந்தியாவில் உள்ள முன்னணணி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம். இந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில்  7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், முக்கிய செய்திகள், அரசியல் விவகாரங்கள் என தேசிய செய்திகளை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தை இன்று டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

இது, ஏ.என்.ஐ செய்தி சேனலுக்கும், அதைப் பின் தொடர்பவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, டுவிட்டர் நிறுவனம், ஏ.என்.ஐ, டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால், முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  மேலும், டுவிட்டர் கணக்கைத் தொடங்கியவரின் வயது 13க்கு கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தானியங்கி மது இயந்திரத்தை நிறுத்தவில்லை என்றால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை..!