Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வது நாளாக தொடரும் டெல்லி முதல்வரின் போராட்டம்: பெருகும் ஆதரவு

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (09:51 IST)
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 5வது நாளாக இன்று ஆளுநர் இல்லத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு ஆளும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டி இருந்து வருகிறது. 
 
அரசின் திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மறுக்கிறார்களாம். அதோடு, தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு பிறகு, அமைச்சர்களுடனான கூட்டத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். 
 
இதனால், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார்.
 
மேலும் ஆளுனரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் கெஜிர்வால். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் டெல்லி துணை நிலை ஆளநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில் தொடர்ந்து 5வது நாளாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments