Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை நகரில் வெடிகுண்டு வைத்ததாக நள்ளிரவில் மிரட்டல் விடுத்த நபர்!

Sinoj
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (15:37 IST)
மும்பை நகரில் 6 முக்கிய  இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு ஒரு மெசேஜ் வந்தது.

அதில், மும்பை நகரில் 6 முக்கிய  இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்ற மிரட்டலுடன் தகவல் வந்ததாக மும்பை போலீஸார் கூறியுள்ளனர்.

இதையடுத்து, மும்பை மாநகர் முழுவதும் போலீஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களால ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மிரட்டல் பதிவிட்ட  நபரை கண்டுபிடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

அடுத்த கட்டுரையில்
Show comments