Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டில் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க மத்திய வேளாண் அமைச்சகம் திட்டம்

நாட்டில் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க மத்திய வேளாண் அமைச்சகம் திட்டம்
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (18:27 IST)
மத்திய வேளாண் அமைச்சகம் எண்ணெய் வித்துக்களை மேம்படுத்த சில யுக்திகளை வெளியிட்டுள்ளது

இனிவரும்  நான்கு ஆண்டுகளில் எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு உத்வேகம் கொடுப்பதில் மத்திய வேளாண் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.

பாரம்பரியமாக எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யப்படும் விவசாய நிலப் பகுதிகளில் மட்டுமல்லாமல்  இதர பகுதிகளிலும் கூட எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்ய ஊக்கம் தருவது, தரிசு நிலங்களை பயன்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதன் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு யுக்திகளை மத்திய வேளாண் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

வருகிற செப்டம்பர் 18, 19 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வேளாண் மாநாட்டில் இந்த யுக்திகள் பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் விளக்கம் கொடுக்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - வீடியோ