Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு வாக்களித்த விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (13:48 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் வசித்து வரும்   தனஞ்செய் தன் ஒரு விரலை வெட்டி  மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மஹாராஷ்டிரம் மாநிலத்தில்  முதல்வர் ஏக்நத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மும்பை உல்ஹாஸ் நகரில்  நந்தகுமார் என்பவர் தன் குடும்பத்துடன்  முகாம் எண் 4. உள்ள அஷாலேபாடா பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

 நந்தகுமார் தற்கொலை செய்து கொள்ளும்புன், தன் செல்போனில், சங்ராம், நிகால்ஜே, ரஞ்சித் சிங், நாயக், நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக்,  நிதின் தேஷ்முக் ஆகியோரால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் அண்ணன், அண்ணி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகிறார்.

ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த  நந்தகுமாரின் சகோதரர் தனஞ்செய், தனது ஒரு விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து,  மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், தனஞ்செய் ஒரு வீடியோவில்,  ‘ பாஜக அரசுக்கு வாக்களித்த  விரலை வெட்டி உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்ப உள்ளதாக ‘தெரிவித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments