Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞரை கடித்து கொன்ற சிங்கம்..! செல்பி எடுக்க சென்றபோது விபரீதம்.!!

Senthil Velan
வியாழன், 15 பிப்ரவரி 2024 (20:14 IST)
திருப்பதியில் செல்பி எடுக்க சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி  குதித்து உள்ளே சென்றுள்ளார். 
 
அங்கிருந்த சிங்கத்துடன் செல்பி எடுப்பதற்காக, அதன் அருகே அந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிங்கம் ஒன்று, அவர் மீது பாய்ந்து கடித்துக் உதறியது. 
 
அந்த இளைஞர் கூச்சலிட்டதால் அங்கிருந்த பணியாளர்கள், அவரை ஓடி வருமாறு அழைத்தனர். அதற்குள் அந்த சிங்கம் அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்து கடித்துக் கொடூரமாக கொன்றது.

ALSO READ: மின் கசிவால் தீப்பிடித்து எரிந்த கிரேன்..! போராடி தீயை அணைத்த வீரர்கள்..!!
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த இளைஞரின் சட்டத்தை மீட்டு, உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். செல்பி எடுக்க சென்ற இளைஞர் ஒருவர், சிங்கம் கடித்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி கொண்டாட மறுத்த இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

மருத்துவக் கல்வியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.. தீர்ப்பை எதிர்த்து போராட்டம்..!

ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments