Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்ரன் சிங் நடிகையின் கடைசி ’வாட்ஸ் அப் ’பதிவு : வைரலான விவரம்

சிம்ரன் சிங் நடிகையின் கடைசி  ’வாட்ஸ் அப் ’பதிவு : வைரலான விவரம்
, புதன், 9 ஜனவரி 2019 (12:59 IST)
சில நாட்களுக்கு முன் சிம்ரன் சிங் என்ற பிரபல நடிகை ஒரு பாலத்தின் கீழே கேட்பாரற்று இறந்து கிடந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தான் சாகும் முன் பேசிய வாட்ஸ் அப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஒடிஷா மாநிலத்தின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் சிங் ஆவார். செல்பி பிபோ , ரிக்‌ஷாவாலா,ரிம்ஜிம், தில் கா ராசா போன்ற ஆலபம் பாடல்களில் நடனம் ஆடி பிரபலமானார்.
 
இந்நிலையில் சாம்பல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மஹாநதி ஆற்றின் கரையில் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிம்ரன் சிங்கின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து இது கொலையா, தற்கொலையா என்ற ரீதியில்  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தன் கடைசி நேரத்தில், வாட்ஸ் அப்பில்  இருந்து தன் தோழிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார். 
 
அதில்,’ நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அனைவரையும் விட்டுச்செல்லுகிறேன்.’ இவ்வாறு சிம்ரன் சிங் அதில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிஃப்ட் கொடுத்த ஆண்டவர்: படாதபாடுபட்ட பரிதாபம்