Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரதிகாரிக்கு பெண் அதிகாரி காலணி கயிற்றை கட்டிவிட்ட சம்பவம்! முதல்வர் அதிரடி உத்தரவு

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (19:13 IST)
மத்திய பிரதேசத்தில்  உயரதிகாரி ஒருவரின் ஷூவின் கயிற்றை ஒரு பெண் அதிகாரி கட்டிவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள சிங்ராவ்லி என்ற மாவட்டத்தில் சித்ராங்கி நகரில் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் அஸ்வன்ராம் சிராவன்.  இந்த நிலையில், இவரது ஷூவின் கயிற்றை ஒரு பெண் அதிகாரி கட்டிவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், ‘’உயரதிகாரியின் காலணி கயிற்றை பெண் அதிகாரி கட்டிவிட்டதாக கூறப்படுவது கண்டனத்திற்குரியது, உடனடியாக அந்த அதிகாரியை பதவியில் இருந்து நீக்கும்படி  உத்தரவிட்டுள்ளேன். எங்களுடைய அரசியல் பெண்களுக்கான மதிப்பு அதிகம் முக்கியத்துவமானது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments