Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம்: மும்பையில் இன்று திறப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:07 IST)
இந்தியாவின் முதல் நேரடி ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையம் இன்று திறக்கப்படுவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவை உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோ ரூம் இல்லாத நிலையில் மும்பையில் ஆப்பிள் விற்பனை நிலையம் தொடங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மும்பையில் திறக்கப்பட உள்ள ரீடைல் ஸ்டோரின் வெளித்தோற்றத்தையும் தனது இணையதளத்தில் ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்தது. 
 
இந்த நிலையில் இந்தியாவின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறக்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையத்திற்கு ஆப்பிள் பிகேசி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்க ஆப்பிள் சிஇஓ டிம்குக் இந்தியா வந்துள்ளார் என்பதும் ஏப்ரல் 25ஆம் தேதி இரண்டாவது விற்பனை நிலையம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments