Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம்: மும்பையில் இன்று திறப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:07 IST)
இந்தியாவின் முதல் நேரடி ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையம் இன்று திறக்கப்படுவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவை உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோ ரூம் இல்லாத நிலையில் மும்பையில் ஆப்பிள் விற்பனை நிலையம் தொடங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மும்பையில் திறக்கப்பட உள்ள ரீடைல் ஸ்டோரின் வெளித்தோற்றத்தையும் தனது இணையதளத்தில் ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்தது. 
 
இந்த நிலையில் இந்தியாவின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று திறக்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையத்திற்கு ஆப்பிள் பிகேசி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்க ஆப்பிள் சிஇஓ டிம்குக் இந்தியா வந்துள்ளார் என்பதும் ஏப்ரல் 25ஆம் தேதி இரண்டாவது விற்பனை நிலையம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments