Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகள்- காதலனை கொன்று முதலைக்கு வீசிய தந்தை கைது!

honour killed
, திங்கள், 19 ஜூன் 2023 (16:31 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் மொரெனாவில் ரத்தன்பாசி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி தோமர்(18).  இவர் அருகில் உள்ள பலுபு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர்(21) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி ஷிவானி  காதலில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், கடந்த ஜூன் 3 ஆம் தேதி ராதிஷ்யம் காணாமல் போனார். அதே தினத்தன்று, ஷிவானியையும் காணவில்லை.

இவர்கள் இரு வீட்டாரின் எதிர்ப்புக்கு  அச்சம் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக இளைஞரின் பெற்றோர் நம்பி, இதுபற்றி போலீஸில் புகாரளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணையில், ஷிவானியின் தந்தையிடம் போலீஸார்  நடத்திய விசாரணையில் அவர் தன் மகள் மற்றும் காதலனை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த ஜூன் 3 ஆம் தேதி சுட்டுக் கொன்ற பின் அவர்கள் இருவரின் உடலை பெரிய கற்களில் கட்டி,முதலைகள் நிறைய சாம்பல் ஆற்றில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு, 200க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில்,  மகள் மற்றும் காதலனின் உடல் வீசப்பட்டுள்ள  இடத்தை போலீஸிடம் காட்டியுள்ளார்.

அங்கு, இருவரின் உடல்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா?