Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிரவாதிகள் அழிப்பு : பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

Advertiesment
The destruction
, புதன், 27 பிப்ரவரி 2019 (12:51 IST)
நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படை தன் துல்லியமான தாக்குதலை நடத்தி 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று அழித்தது.
இந்த செய்தி  நாடுமுழுவதும் பரவியதால் மக்கள் தம் மகிச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும்காஷ்மீர் மாநிலம் கதுவா, சம்பா, பூஞ்ச், ரஜவுரி, உத்தம்பூர், ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் நம் தேசிய கொடியை ஏந்தி பட்டாசு வெடித்து கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.
 
புல்வாமா தாக்குதலில் பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குரு என்பவரின் ஊரில் இளைஞர்கள் எல்லாம் அவரது இல்லத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து உணர்ச்சி பூர்வமாக கொண்டாடினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் விமானம் மூலம் தாக்குதல்– எல்லையில் பதட்டமான சூழல் !