Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாம்பூச்சி விளையாடிய காதலன் உயிரிழப்பு.. காதலி கைது

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:12 IST)
சூட்கேஸில் ஒளிந்து விளையாடிய காதலன் இறந்த சம்பவத்தில்  காதலி கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சாரா. இவர் வின்டர் பூங்கா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

இவர், ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாராவின் வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன்பின்னர், இருவரும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜார்ஜ் ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் ஒளிந்துள்ளார்.

அவர் தானே வெளிவந்து விடுவார் என நினைத்து சாராவும் தூங்கிவிட்டார்.

பின்னர், காலையில் எழுந்து தன் காதலரை வீட்டில் தேடியுள்ளார். ஆனால், அவரைக் காணவில்லை. பிறகுதான் அவருக்கு  ஜார்ஜ சூட்கேஸில் ஒளிந்தது ஞாபகம் வந்தது.

உடனே அதைத் திறந்து பார்த்தபோது, அதில், மூச்செடுக்க முடியாமல் இறந்துவிட்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments