Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகளை வீட்டுக்குள் பூட்டி வைத்த கொடூரம் !

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:11 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே  கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை  அருகில் வசிப்பவர்கள் இரவு நேரத்தில் பூட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தாய், தந்தை, மகன் உள்ளிட்ட ஒரு குடும்பம் வசித்து வருகின்றனர். இதில், பெற்றோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் மருந்தகத்திற்குச் சென்று மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால் அருகில் வசிப்போர் அவர்களின் வீட்டை இரவு நேரத்தில் பூட்டி விட்டனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments