Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியக் கொடி ஏற்றிய ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதியின் சகோதரர்: வைரல் புகைப்படம்..!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (10:47 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதியின் சகோதரர் ஒருவர் தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அனைவரும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார் 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜாவித் மமூது என்பவர் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். 
 
இந்த நிலையில் இவருடைய சகோதரர் தனது வீட்டில் இன்று தேசிய கொடி ஏற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’என் மனதில் இருந்து தேசியக்கொடியை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் 14ஆம் தேதி நான் என் கடையில் அமர்ந்திருக்கிறேன். வழக்கமான இந்த நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடையை அடைத்து விடுவோம், முன்பிருந்த அரசியல் விளையாட்டுகள்  இப்போது இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments