Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

Advertiesment
Taralist Attack

Senthil Velan

, திங்கள், 8 ஜூலை 2024 (20:42 IST)
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
 
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், இன்று ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
 
இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. தீவிரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
6-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்,  ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை