Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயிலில் பிடிபட்ட தீவிரவாதிக்கு ஐ.ஏஸ் அமைப்புடன் தொடர்பு : பகீர் தகவல்

Advertiesment
ரயிலில் பிடிபட்ட தீவிரவாதிக்கு ஐ.ஏஸ் அமைப்புடன் தொடர்பு : பகீர் தகவல்
, புதன், 6 ஜூலை 2016 (10:49 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் விஸ்வபாரதி ரயிலில் போலீசாரிடம் பிடிபட்ட முகமதுமுசுருதீன் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.


 

 
பயங்கரவாதி ஒருவன் விஸ்வபாரதி விரைவு ரயிலில் பயணிப்பதாக, மத்திய புலனாய்வு துறை புர்த்வான் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து ரயில்வே காவலர்களுடன்  இணைந்து அவர்கள் புர்த்வான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அந்த ரயிலை சோதனையிட்டனர். 
 
இந்த சோதனையின் போது தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட மொசுருதீனை அவர்கள் கைது செய்தனர். 
 
வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் இந்த தீவிரவாதி கைது நடந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முசுருதீன், மேற்கு வங்க மாநிலம் மிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் திருப்பூரில் 6 ஆண்டுகள் தங்கி, அங்கு அவர் மளிகை கடை நடத்திக் கொண்டிருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  அவரிடமிருந்து 6 சிம் கார்டுகள் மற்றும் 2 போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இவர் திருப்பூரில், ஐ.எஸ் அமைப்பு ஆள் சேர்க்கும் வேலையில் தீவீரமாக ஈடுபட்டிருந்தார். எனவே அவரது சகோதர் , அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளிடம் நுண்ணறிவுப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்கள் முன்பு அடி வாங்கிய ஆசிரியை