எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு.. போர் தொடங்கிவிட்டதா?

Siva
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (09:31 IST)
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெஹல்காம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதால், 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் உள்ளிட்ட அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இந்திய வீரர்கள் அதற்கும் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவ தரப்பில் சில வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று நடந்த இந்த தாக்குதல் காரணமாக, இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments