Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

Prasanth Karthick
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (09:24 IST)

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக மக்கள் பலரும் ஜம்மு காஷ்மீர் சுற்றுலாவை ரத்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தற்போது கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில் மக்கள் பலரும் குளிர் பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு அதிக அளவில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறாக தேசிய அளவில் மக்கள் அதிகம் விரும்பி செல்லும் இடங்களாக காஷ்மீர், சிம்லா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சமீபமாக காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது.

 

இந்நிலையில் கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் சுற்றுலா பயணிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா சீசன் என்பதால் காஷ்மீரில் உள்ள தங்கும் விடுதிகள் முதற்கொண்டு முழுவதும் புக் ஆகியிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த தாக்குதலின் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் தங்கள் புக்கிங்கை வேகவேகமாக கேன்சல் செய்து வருகிறார்கள்.

 

காஷ்மீரில் உள்ள மக்கள் பலருக்கும் சுற்றுலா வழியாகவே வருவாய் கிடைக்கிறது. இதனால் குதிரை ஓட்டுபவர்கள், பூ விற்பவர்கள் என எளிய மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பயணத்தை ரத்து செய்யும் மக்கள் அதற்கு பதிலாக இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல அதிகளவில் புக்கிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments