Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் தாக்கி 10 பேர் பலி...

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (13:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள துர்கா தாலுக்காவில் சர்தாரி ககர்வாடா பகுதியில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
அதேபோல், மஜால்காவ் தாலுகாவில் மரத்தின் அடியே ஒதுங்கிய 55 வயது பெண்மணியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
 
மேலும், அதே பகுதியில் உள்ள ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். அதோடு, ஜல்னா மாவட்டத்தில் தொபடேஷ்வர் கிராமத்தை சேர்ந்த சந்திரபகா தபாடே(52) என்பதும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
 
தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments