Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் தாக்கி 10 பேர் பலி...

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (13:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள துர்கா தாலுக்காவில் சர்தாரி ககர்வாடா பகுதியில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
அதேபோல், மஜால்காவ் தாலுகாவில் மரத்தின் அடியே ஒதுங்கிய 55 வயது பெண்மணியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
 
மேலும், அதே பகுதியில் உள்ள ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். அதோடு, ஜல்னா மாவட்டத்தில் தொபடேஷ்வர் கிராமத்தை சேர்ந்த சந்திரபகா தபாடே(52) என்பதும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
 
தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments