Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு 100 அடி சிலை, சாதனையை பாராட்டி கோவில்!!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:14 IST)
பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டி அவருக்கு கோவில் ஒன்றை கட்டுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


 
 
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே இந்த கோவில் கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்ற ஓய்வுபெற்ற என்ஜினீயரார் கட்டுகிறார்.
 
ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். மோடியின் நடவடிக்கைகளும், அவரது வளர்ச்சி திட்டங்களும் ஜே.பி.சிங்-கை வெகுவாய் ஈர்த்துள்ளது.  
 
எனவே, மோடிக்கு கோவில் கட்டுவது என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக 5 ஏக்கர் நிலத்தையும் வாங்கியுள்ளார். அந்த கோவிலில் மோடியின் 100 அடி பிரமாண்ட சிலை ஒன்றையும் அமைக்க உள்ளார்.
 
வரும் 23 ஆம் தேதி பூமி பூஜை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments