விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு; ரிசர்வ் வங்கி

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:04 IST)
புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
இந்த நிதியாண்டின் இறுதியில் மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறைவு பெறும். அதனைத்தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும். படிப்படியாக திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் வெளியான புதிய ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் மாற்றம் பெற்றதால் ஏடிஎம் வழியாக மக்களுக்கு கிடைக்கவில்லை மாறாக வங்கிகள் மூலமாகவே மக்களை சென்று சேர்ந்தது. அதுபோல புதிதாய் அச்சடிக்கப்பட உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவே எளிதாக ஏடிஎம் வழியாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments